Daily Quotes

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR


அறம்தாண்டா வாழ்வினுக்குள் அடியெடுத்து வையுங்கள்

புறம்காட்டி ஓடாத் புனிதத்துள் நுழையுங்கள்

வரம்வேண்டி வந்த வாழ்விதனை வெல்லுதற்கு

மறம்தேடி ஓடாமல் மனிதத்துள் மரணியுங்கள்

28 July 2023


எதுவேண்டும் என்னவேண்டும் எப்போது வேண்டுமோ

அதுவடைய அருள்கூட்டும் அருந்தமிழே அறிவாக

புதுப்பொலிவைக் காட்டும் புத்துயிரைச் சேர்க்கும்

இதுபோது மெனபிறவி முடித்தற்கு உதவுமே.

3 July 2023


என்றும் மாறா தொன்றைப் பற்றி

அன்புடன் அகத்தே பதியம் இட்டு

நன்றும் தீதும் சேரா வாழ்வை

இன்றே அடைந்திட நினைமின் நன்றே.

25 June 2023


மாயம் செய்யும் மனுஷனை விலக்கு

காயம் செய்யும் செயல்களை ஒதுக்கு

பாயும் காம ஒழுக்கை நிறுத்து

வாயும் அடக்கி வாழ்ந்திடு மனனே.

17 June 2023


அத்தனை அடைய அன்னையு முதவாள்

சித்தனை அன்றி சிவங்காட்ட யாருளார்

பித்தனைப் போல்திரிந்து பிழைப்பட்டு மாளுமுன்

முத்தனைத் தேர்ந்து குருவாக வணங்குமே.

25 May 2023


ஒன்றும் ஒன்றும் ஒன்றா திருந்தால்

ஒன்றும் ஒன்றும் இரண்டாய்த் தெரியும்

ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போனால்

ஒன்றே நிலைக்கும் பிறப்பிறப் பிலையே.

13 May 2023


காதல்செய் காதல்செய் காலனைக் கடக்கவே

காதலின் லயத்திலே கருணையை பெருக்கவே

வாதம் செய்யா வழித்துறை நடந்து

சாதலை அறுத்திடு சாய்விலா நிலைத்திடு.

21 April 2023


தன்னைத் திருத்தாது தானுவகைத் திருத்த

எண்ணிடில் வருமே கேடும் வினையும்

தன்னை யுணர வழிதேடி முதலில்

தன்னிலை திருத்தியோர் தானுலக வழியாமே.

4 April 2023


ஐயம் தீர்ப்பான் ஐயனென் றறிந்து

ஐயனே என்றவர் கால்மாட்டில் வீழ

ஐயந் தீரும் அருளுங் கூடும்

ஐயன் பார்க்க அறுந்திடும் பிறப்பே.

18 March 2023


பணமெனும் பேதையைப் பார்த்து ரசிப்போர்

குணமெனும் மேடையில் நடித்துக் களிப்போர்

கணமேனும் உண்மையை நினைக்க மறந்தோர்

பிணமாக மண்ணில் வாழத் தெரிந்தோரே.

3 March 2023


ஆதியெது அந்தமெது அறியவேண்டி வந்தால்

ஓதியதை மறந்துவிடு உள்ளொளியைக் கண்டால்

தூதுவரும் துணிவுவரும் குருபதத்தில் நின்றால்

மோதுமாசை அத்தனையும் துகள்துக ளாமே.

22 February 2023


வாய்பொத்தி கண்பொத்தி வாய்த்த செவிபொத்தி

பாயுமிரு மூச்சைப் பக்குவமாய் பொத்தி

காயும் நிலவை கண்புருவ நடுவைத்து

சாயும் நிலைதெரிய சாவும் ஒதுங்காதோ.

6 February 2023


மறவாத நினைவு மெய்கூட்டி இருந்தால்

திறவாத கதவும் திறந்திடக் காணும்

உறவாக வாழ்ந்த நாட்களும் மனத்தில்

இறவா நிலையைப் பெற்றிடும் உண்மையே.

16 January 2023


சும்மா வென்னும் சொல்லின் பொருளை

சும்மா வறிய சுகமமை யாதே

அம்மா வென்றால் அகப்படும் பொருள்போல்

சும்மா தருவதால் சும்மா உணருமே.

9 January 2023


புத்தியை திருத்தி புனிதத்துள் நிறுத்தி

யுத்தியை வெற்றிக்கு வடிவமைத்துக் கொடுத்து

சத்தியை சகலரும் சமனுறச் செய்வோர்

சித்தியை அடக்கி ஆளும் திறத்தரே.

26 December 2022


நிலைதெரிந்து வாழக் கற்றவர் யாரும்

நிலைகெட் டழிந்து போனதே இல்லை

நிலையதை உணர்ந்து நித்திய மாக

நிலையிலா செயலை விட்டொழித் திடுமே.

15 December 2022


குருவிலா வித்தைப் பாழெனச் சொல்லியும்

குருநிலை தேடா திருப்பதுஞ் சரியோ

கருவிலேக் கொண்ட கணக்கதை முடிக்க

உருவிலே வந்தால் உண்டுடன் விடிவே

1 November 2022


நடுங்கும்குணம் நமக்கேனென நடைமாற்றிட சிறப்பு

ஒடுங்கும்மனம் அடையும்தினம் ஒப்பாரிலா மதிப்பு

கடுங்காமமும் கழலாவரை கருணைக்கிலைப் பிடிப்பு

நடுசாமமும் பகல்போலினி விளங்கவரும் விழிப்பு.

29 October 2022


தானே தெளிய யார்க்குங் கூடாதே

விணே முயன்று விரசம் ஆகாதே

கோனே யானாலும் கும்பிட்டு தாள்பணிந்து

வானே என்று வாழ்த்தாது வழியிலையே.

8 October 2022


பிறக்கா திருக்க பிழைப்படா திருக்க

இறக்கா திருக்க பகைப்படா தமைக்க

மறக்கா திருக்க மனமடங்கி கற்க

உறங்கா திருக்க ஒருபொருள் நினைவே.

21 September 2022


பலன்யாவும் பகரவல்லான் பாவமும் போக்கவல்லான்

நலன்யாவும் பெறுதற்கு நல்லாசித் தரவல்லான்

உலகாளும் மெய்ப்பொருளாய் என்று முள்ளானை

தலையாலே தான்துதிக்க இலையாமே வினையே.

15 September 2022


அழும்நாள் உண்டு அகஞ்சிரிக்க வாய்ப்புண்டு

தொழும்நாள் கண்டு தொடராது தீவினையே

முழுநாளும் இறைப்பணிக்கே ஈவார்க்கு விதிமாறும்

விழுநாளு மொருமுறையே விரைந்துவான் செல்வரே.

24 August 2022


குருசொல் கேளார்க்கு குறைதீர வழியேது

கருத்துள் கருணையும் கலந்தாள விதியேது

வருத்தும் வினையே வழிமாற்றி ஈர்ப்பதினால்

திருத்த வருகிருந்து வாழ்விப்பாய் குருவே.

7 August 2022


அன்னை பெற்றாள் தந்தை வளர்த்தான்

முன்னை வினைப்படி மூண்டன உறவுகள்

இன்னும் நட்பும் இணைந்தது வாழ்வில்

தன்னை உணர்த்த தேடுநீ குருவை.

24 JULY 2022


அட்டமா சித்தை அடைந்திடத் துடிப்பார்

திட்டமா யெதையும் தெரிந்தறிய முனையார்

இட்டமா குருவடி கிடந்தடையும் பேற்றை

துட்டமா நினைப்பார் தெளிவிலா தவரே.

17 JULY 2022


ஆக்கல் அரிதாம் அழித்தலோ வெளிதாம்

ஆக்கலைக் காட்டிலும் அழித்தலில் மனிதன்

நோக்கம் இருப்பதால் நொந்தொரு பயனிலை

ஏக்கம் இறையொடு வைத்தொதுங் கிடுமே.

10 JULY 2022


விதிவழி நடத்தும் வாழ்க்கை மற்றோர்

சதிவழி ஆழ்த்தும் முன்னே பெற்றதம்

மதிவழி செலுத்த முனைவோர் குருவை

துதித்து சரணிட துணைவரும் விடிவே.

3 JULY 2022


வான்பார்த்த நிலத்தில் வாழவந்தும் இன்னும்

தான்மாற மறுக்கும் மாநிடர்க் கேதுரைக்க

ஊனுடல் பற்றிச் செய்வன வெல்லாமே

தானுண்டு மக்கும் மண்ணுக்கே அறியீரே.

23 JUNE 2022


என்னவேண்டு மென்றெனைக் கேளாமலே எல்லாம்

எனக்களித் தாதரிக்கு முன்னையா னின்னும்

எண்ணுமா றறியேன் வேண்டுமின்னு மென்றுனை

எண்ணுவ தழகோ வறிந்திலன் பொறுப்பயே.

16 JUNE 2022


தேடித் திரிந்தால் தென்படான் தென்னவன்

பாடித் துதித்தால் உதிப்பான் முன்னவன்

வாடிக் கிடந்தால் வாழ்த்திட வருமவன்

நாடித் துடிப்பில் கலந்துள நம்மவன்.

9 JUNE 2022


எண்ணா திருந்தாலும் எண்ணவைத்து என்நினைவில்

வண்ணமலர் சோலையாய் வசந்தங் கொடுத்தாளும்

விண்ணாளும் பொருளே வித்தைதந் தென்தனை

மண்தாண்ட வருளே மாமணியே என்குருவே.

2 JUNE 2022


வார்த்தையைப் பங்கிட்டு வாதமிடும் மனிதர்காள்

ஈர்ப்புமைக் கைவிட்டால் இங்கிருக்க லாகுமோ

கூர்த்தப் புருவத்தேக் குவிந்துள்ள மெய்க்கண்டால்

ஆர்க்கும் பகைவருமோ அறிந்துணர்ந்து மகிழ்வீரே.

28 MAY 2022


ஓடும் மூச்சும் ஒடுங்குமுன் எனக்கே

ஆடுங் கலையின் அடவுகள் காட்டி

பாடும் வித்தையில் படிநிலை ஏற்றி

கூடும் படியுனை செய்தனை குருவே.

15 MAY 2022


அன்பில் பிணைந்து அறிவில் முனைந்துமெய்

இன்பில் தவழ்வ துறவு.

8 MAY 2022


எத்தனை பேரிங்கு வாய்த்தும் குருவாமோ

வித்திடும் மெய்யிறை ஒன்று.

1 MAY 2022


பெற்றோரை பேணல் உயிருள மட்டுமாம்

விற்றொதுங்க லாகா பொறுப்பு.

25 APRIL 2022


ஈன்றாளைப் போற்றான் உலகத்து சான்றோரால்

நன்றானாய் போற்ற லரிது.

18 APRIL 2022


அயலார் கருமத்தை ஆளா தொதுக்கி

இயல்பா யிருக்க இனிது.

11 APRIL 2022


இறைக்கே இழக்க இனிதே துணிந்தார்

மறைக்கே விளக்காய் மாறிடக் காண்பார்

குறைக்கே பலியாய் தனையிழக் காது

நிறைக்கே முயன்றால் நித்தியம் தானே.

3 APRIL 2022


அன்பால் அடக்கி அறத்தால் முடக்கி

இன்பால் இளக்கி இயல்பால் உருக்கி

உன்பால் நெருக்கி உளத்தால் உலுக்கி

துன்பால் துலக்கி துணைவா இறையே.

27 MARCH 2022


உருவில் வந்தானை உருகி உளங்காண

கருவில் நின்றானா யிருக்கு மிறையே

குருவில் முன்தோன்ற கண்கண்டு கசிந்து

திருவில் எனைசேர்க்கக் கண்டேன் இன்றே.

17 MARCH 2022


அன்பினால் உருக்கிமனதை காதலாய் வெளிகிளப்பி

இன்பினைத் தருமிறையை இதயத்தே இருத்துவார்க்கு

துன்பினி என்றுமிலை தொடர்வினையும் சுடுவதிலை

தன்பிணிப் போக்கும் மருந்திதாய்க் கொள்கவே.

9 MARCH 2022


நல்லவழி யல்லாது தீவழிக்குத் துணைபோமோ

வல்லகுரு நாதன் வாய்மொழி சீடருக்கு

பொல்லாங்கை எண்ணாது புனிதமாய் புரிவார்க்கு

எல்லாமும் நல்லதாய் நடத்தும் நாட்களே.

1 MARCH 2022


பித்தாக வைத்தாய் பிதற்றியுனை வாழ்வின்

சொத்தாக வைத்தாய் சொந்தம்நீ மட்டுமென

சித்தாக வைத்தாய் சிற்றம்பலத் திருத்தியுனை

நித்தமும் கண்டுகண் டேகடைத் தேறிடவே.

22 FEBRUARY 2022


என்றுமே யானெனுங் கர்வம் வந்தணையா

துன்னையே நினைந்திருக்க உன்னருளே வேண்டுவதால்

இன்னும் இம்மடையன் இம்மண்ணில் இருந்தென்

உன்னுள் கலந்திருக்க உதவிடுவா யிறையே.

15 FEBRUARY 2022


பொய்யிலா வாழ்வே புகழ்தரும் மண்ணில்

மெய்வழிச் சேராது இடமிலை விண்ணில்

பொய்யும் மெய்யும் அறியார்க் கென்றும்

செய்தவத் தால்மட்டும் இறையுதவு மாமே.

8 FEBRUARY 2022


ஞானம் நெருப்பென்றும் ஞாலம் உணர்ந்துமஞ்

ஞானம் அகலா திருப்பதினால் ஞாலத்தில்

தானந் தவங்கூட வாய்க்காது பேச்சடக்கி

மோனத் திருக்கச் சிறப்பு.

1 FEBRUARY 2022


குருசெயலை கூர்ந்து குறைகூறி தனக்கு

கருசெய்வார் காலத்து மீளா அருவுரு

பெற்றுற்று பேதலிப்பார் ஆண்டவனே வந்தாலும்

இற்றிடா தாட்டும் விதி.

25 JANUARY 2022


ஐயனே என்றுனை அருகுவந் தணைக்க

ஐயப்பட் டேநின்றேன் ஆயினும் அகத்தினுள்

ஐயன்நீ யமர்ந்தே யாரத்தழு வென்றுமே

ஐயந்தீ ராதுளேன் அகற்றுவிப் பாயோ.

19 JANUARY 2022


உன்மடியில் தலைசாய்த்து உறங்காமல் கிடந்தப்போ

என்னிருகண் புருவத்தின் பூட்டுடைய கண்டேனே

வன்னிமரத் தடியிருந்த வாழ்வளித்த வானமுதே

உன்னடிக்கு சரணானேன் உணராமல் ஏன்பிரிந்தாய்.

12 JANUARY 2022


வாய்மொழிக்கு வழிகொடுத்து வார்த்தை வடித்தெடுத்து

தாய்மொழியை தத்தளித்தாய் தாலாட்டில் பிறக்கவைத்து

நோய்ப்பாட்டில் விழுநேரம் உன்துடிப்பை மருந்தாக்கி

சேய்தேற செய்தவளே சொல்லாமல் ஏன்பிரிந்தாய்.

5 JANUARY 2022


தாயை மறந்தமனம் தந்தை பழித்தகுணம்

சேயை அகன்றதனம் செல்வாக் கிழந்ததினம்

நோயை வளர்த்தவிதம் நோன்பிலா வளர்ந்தபலம்

பேயை அடுத்தமுகம் மண்ணிலே இருந்தெதற்கு.

31 DECEMBER 2021


குருவேண்டும் குணமாற குருவே வேண்டும்

கருமூட கண்மூடு முன்னேமுக் கண்தேட

அருகூடு மானந்தம் அகத்தெழுந் தோடும்

திருவாக தேடின்றே மெய்ஞான வெளியே.

29 DECEMBER 2021


உற்றுற்றுப் பார்க்க உறுதிக்கு நன்று

கற்றடங்கி இருத்தல் கதிபெற நன்று

பற்றற்று பயில பரன்தொட நன்று

குற்றங் களைதலே குணமுற நன்றே.

22 DECEMBER 2021


நானே நீயோ நீயே நானோ

தானே யுரைக்க நம்புவர் யாரோ

வீணே புலம்பி விளக்குதற் காகா

கோனே குறிகாட்டி குணம்மாற் றுவாயே.

14 DECEMBER 2021


நீராய் விரிந்த கடலேதா னாகினும்

வாரார் குடிக்க வடியாதே சீரா

யிருந்தாலுங் கொள்ளார் சினமிதக்க தம்மை

உருவாக்க நோக்கா துலகு.

6 DECEMBER 2021


பித்தனோ பிழைகோடி செய்தழிந் தனனோ

வித்தைகல் லாபிறவி விரயத் துற்றனோ

சத்தெலா மிழக்குஞ் சழக்கை புகுந்தனோ

அத்தனே யுன்னடிக் காளாகு நாளென்றோ.

29 NOVEMBER 2021


செய்தபிழை கோடிக்கு கிடைத்தபிழை பிறப்பாம்

எய்தவினை அறியாது ஏற்றிசுமை யாக்கின்

பெய்தமழை பற்றாது பரிசுத்தங் கிட்டாது

செய்தவத் தால்வந்தால் சென்னிதாழ்த் திடுமே.

22 NOVEMBER 2021


சினங்கெட் டொழிய சீர்வந் தேகும்

மனம்தெம் படைய பயம்விட் டோடும்

இனஞ்சேர்ந் திருக்க பகைதிசை மாறும்

தினம்பணிந் தோர்க்கு இறைதுணை தானே.

15 NOVEMBER 2021


வந்தபகை யோட வரும்பிணிகள் மாள

சந்ததமுஞ் சிறக்க சமுகபுகழ் கூட

அந்தகனோ அருகில் வருகுதற் கஞ்ச

சிந்தைவந் தாண்டு சிறக்கவை குருவே.

8 NOVEMBER 2021


இடரிது துயரிது என்றினங் காணாத

திடநிலைக் கூடுமேல் திருப்திவந் தாளுமே

படர்மன நினைவினை பார்த்தழித் திடவே

சுடரறி வில்லார் சுகப்படல் அரிதே.

1 NOVEMBER 2021


வேண்டுவ தேதெனத் தோண்டித் தெரிந்திடும்

தூண்டிடு மாசையைத் தாண்டிக் கடந்திடும்

மாண்டிடு முன்னே முண்டிடும் வானை

ஆண்டிடு மனத்தை அடக்கினார்க் குயர்வே.

25 OCTOBER 2021


சிரித்த முகமும் சிந்தித்த தலையும்

தரித்த வமைதியும் தயாள குணமும்

கரித்த பொறாமையும் கனிந்த பார்வையும்

பொரித்த உபசரிப்பும் பொங்கட்டும் வாழ்விலே.

19 OCTOBER 2021


எதுவேண்டு மென்றறிந்து எனக்கீய உள்ளாரை

இதுவரைக்கும் தெரியாது இங்கங் கலைந்தேன்

புதுவாழ்வு தரவல்ல பெம்மானை யான்கண்டேன்

இதுபோது மவர்சொன்னார் வாழ்வோம் வாழ்விப்போம்.

11 OCTOBER 2021


கண்டதெலாம் வேண்டுமெனக் கதறி யழுதவனா

உண்டதெலாம் போதாது வேண்டுமென திரிந்தவனா

கொண்டதெலாங் கோலமெனக் கொண்டாடிக் கிடந்தவனா

பண்டமற்ற பாண்டத்தைத் தூக்கி யலைந்தனனே.

4 OCTOBER 2021


ஒருவாய் மூடி இருவாய் கூடி

கருவாய் தேடி கணக்காய் இருப்போர்

வருவாய் பார்த்து மயங்கா மனதாய்

திருவாய் அடைந்து தொழப்படு வோரே.

27 SEPTEMBER 2021


வாடும் மனதை வழிகாட்டி வளர்வித்து

ஓடும் மூச்சை உள்ளடக்கி குளிர்வித்து

தேடும் நிலைக்கு திரையிட்டு தெளிவடைந்து

பாடும் படிக்கென்னை பணிவிப்ப தெக்காலம்.

25 SEPTEMBER 2021


தீதுண் டென்றறிந்தும் தீதுசெய் வாரிடத்து

ஏதுபலன் கிட்டும் ஏட்டறிவின் விளைச்சலென

சாதுமனங் கோணாது சத்தியத்தே நிற்போர்க்கு

போதுமெனும் வண்ணம்நல் புண்ணியங் கூடுமே.

23 SEPTEMBER 2021


கண்காட்டி கால்மாற்றி கையிரண்டில் குறிகாட்டி

பெண்காட்டுஞ் சுகத்தினுமே லானசுகம் உள்காட்டி

விண்காட்டி வித்தையும் விளக்கமும் பெறநாட்டி

பண்கூட்டி பாலிக்கும் பரனடைதல் எக்காலம்.

21 SEPTEMBER 2021


கண்காட்டி கால்மாற்றி கையிரண்டில் குறிகாட்டி

பெண்காட்டுஞ் சுகத்தினுமே லானசுகம் உள்காட்டி

விண்காட்டி வித்தையும் விளக்கமும் பெறநாட்டி

பண்கூட்டி பாலிக்கும் பரனடைதல் எக்காலம்.

21 SEPTEMBER 2021


தீயைப்போல் சுட்டாலும் தொடர்ந்தலைந்து பிறப்பிற்கு

நாயைப்போல் கிடந்து நாட்டமுற்றார் மத்தியிலே

மாயைப்போ யிடவெனக்கு மருந்தளித்து மனந்திருத்தி

தாயைப்போல் காப்பதனால் ஆனந்தங் கொண்டேனே.

19 SEPTEMBER 2021


வானுயரம் தொடுதற்கு வாழ்வுதவ வேண்டும்

தானுயர குருவுடைய தாள்பிடித்தல் வேண்டும்

தேனுயர்ந்த தமிழாலே ஞானம்பெற வேண்டும்

கோனுயர குடியோரின் ஆசிபெறல் வேண்டும்.

17 SEPTEMBER 2021


பற்றற் றார்க்கே அறஞ்செய லாகும்

குற்றஞ் சூழா குடிமையுஞ் சேரும்

சற்றும் எதற்கும் சளைத்திடா நிலையும்

அற்றங் காணும் அருகதை வருமே.

15 SEPTEMBER 2021


உள்ளுறைந்த மெய்யே உன்வழி காட்டி

கள்ளமல மதனை மூடிக் கொண்டதால்

உள்ளபடி யறிய உனக்கிய லாதே

வள்ளலென வாய்க்கும் குருதுணை நாடு.

13 SEPTEMBER 2021


தனித்தனி யாய்வந்தும் தனித்தனி யாய்சென்றும்

மனிதமனம் கூட்டம் சேர்ப்பதெலாம் பயத்தால்

பனிபோல் வினைஉருக்க பட்டறிவைத் தேடாமல்

இனிபிறவி கொள்வதற்கோ இன்னுமாசை வளர்க்கிறாரே.

11 SEPTEMBER 2021


பாடுபட்டால் பலனென்று படுகின்ற பாடெல்லாம்

கூடுவிட்டா லாகாதே கூடவரும் பொருளறிந்து

ஏடுவிட்டு வெளியேறி ஏந்தலடிச் சேருங்கால்

ஓடுமிரு வாசியுமே ஒடுங்கக்காண் உன்வழிக்கே.

9 SEPTEMBER 2021


குரு கிடைக்க வரங் கிடைக்கும்

வரங் கிடைக்க அருள் துலங்கும்

அருள் துலங்க மருள் மறையும்

மருள் மறைய பரன் வருமே.

7 SEPTEMBER 2021


ஆடுங் காலும் பாடும் வாயும்

சாடும் மூச்சும் ஓடும் நினைவும்

வாடும் மனமும் தேடும் அறிவும்

கூடும் காலம் ஒருவழி சிறப்பே.

5 SEPTEMBER 2021


நாளோட்டும் வித்தைக்கே நாளுமலை கின்றரே

சேலோட்டும் வித்தைத் தெரிந்தால் விடுவரோ

தாலோட்டி தடம்புரண்டு தானழிந்து போகாமல்

காலாட்டி கதியடைய முயலுதல் நலமாமே.

3 SEPTEMBER 2021


எடுத்தவுடல் எத்தனையோ இனிவருவ தெத்தனையோ

அடுத்தடுத்து பிறப்பெடுத்தும் அறியவொணா வினைபலனை

படுத்துமுடல் பார்த்தும் பகுத்தறிய கூடாதார்

விடுவதெங்கே விடிவதெங்கே உடல்சார்ந்து போனாரே.

1 SEPTEMBER 2021


வான்சிந்தைக் கொண்டார்க்கு வளமுண்டு பலமுண்டு

தான் மயங்கும் நிலைமாறி தெளிவுண்டு துணிவுண்டு

வீண்வம்பு சேராது விரயமும் ஆகாது

மீண்டுமொரு பிறப்பும் வமையாது தானே.

31 AUGUST 2021


உள்ளிருப் பாரை உற்றுற்றுப் பெற்றிட

வெளியிருப் பாரே விளங்கிட வைப்பார்

வெளியிருப் பாரை விளங்கிடா தார்க்கு

உள்ளிருப் பாரும் உருகாட் டாரே.

29 AUGUST 2021


உண்டுண்டு உண்மை உனக்கென்ற ஒன்று

கண்டுண்டு கடையேற கருணைகுரு கொண்டு

பண்டுண்டு வந்த பழவினையை தானே

மொண்டிங்கு விட்டால் பிறப்பறும் பாரேன்.

27 AUGUST 2021


எங்குளாய் எனக்குரை ஏகாந்த மெனினும்

அங்குனைக் கண்டு அகமகிழ்ந் தையம்

தங்கிய நெஞ்சினை தட்டிதூ செடுத்து

பங்கமிலா வாழ்வேன் பாரில் இறவாதே.

25 AUGUST 2021


வாராது நோயினி வாட்டுந் துயரினி

பாராது பறந்தோடிப் போம்வல் வினையே

நேராது ஆபத்தும் நிலைதடு மாற்றமும்

கோராது கிடைக்கும் என்தேவை யாவுமே.

23 AUGUST 2021


யாரும் இலையென அஞ்சாதே இனிமேல்

பாரில் உன்துணை உன்உடல் உறுப்பே

தேரென மனமும் புரவியா யறிவும்

சீரென வமைந்ததை சிந்தித்து மகிழே.

21 AUGUST 2021


நற்றவா தமிழ் கற்றவா - எனக்

குற்றவா எந்தன் கொற்றவா - எனைப்

பற்றவா அருள் உற்றவா - பொருள்

விற்றவா வினை முற்றவா!

19 AUGUST 2021


நிலவுல கின்தெய்வம் இறையெனக் கொள்வாய்

குலதெய்வ மாமுந்தன் குருவினைத் தொழுவாய்

குடும்பத்துத் தெய்வமாய்ப் பெற்றோரைப் பணிவாய்

உடம்புக்குத் தெய்வமோ உன்மெய் உணர்வயே.

17 AUGUST 2021


ஊருக்கு அன்பும் உனக்கு அறமும்

பேருக்கு இல்லாது பெரிதுவந் தாற்ற

யாருக்கும் வேண்டும் புனிதம்வந் தமையும்

பாருக்கு நீயே பரிதியும் மதியுமாமே.

15 AUGUST 2021


யாரும் அறியா திருக்கவே முனைந்தேன்

பேரும் உரைக்கா மனதுளே மறைத்தேன்

ஊரும் உறவும் உனக்கிணை யிலையென

சாரும் மனத்தை வாழ்த்தினன் மகிழ்ந்தே.

13 AUGUST 2021


நமக்கினி குறையில்லை நமக்கினி பகையில்லை

நமக்கினி பயமில்லை நமக்கினி தடையில்லை

நமக்கினி இழப்பில்லை நமக்கினி துயரில்லை

நமக்கினி பிறப்பில்லை நம்மைநாம் உணரும்போ.

11 AUGUST 2021


ஓடும் நீரில் விழுந்த துரும்பாய்

வாடும் உனக்கோர் கதியிங் குண்டு

ஆடும் பாடும் ஆசையை ஒழித்து

நாடும் நீர்வழி நமக்குற்ற தென்றே.

9 AUGUST 2021


நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்

வாய்விட்டுச் சிரிக்க வஞ்சமிலா மனமும்

தாய்விட் டகலா நற்கரும பிணைப்பும்

காய்கனி யாவதுபோல் காரியங்கள் உதவிடவே.

7 AUGUST 2021


வருந்தி பயனில்லை வாழ்ந்தநாள் கண்டு

திருந்தி நடப்போர்க்கு பலனிங்கு உண்டு

கருத்தில் மெய்யிருத்த பொய்மாளும் என்று

விருத்திப் பெறவேண்டும் குருபாதம் பணிந்து.

5 AUGUST 2021


நெஞ்சுனை யல்லால் நினைத்திட மறுத்து

தஞ்சமாய் யடைந்ததை தயவுடன் அறிவாய்

பஞ்சமே சூழினும் பாழ்மனம் விலகிடா

அஞ்சுகம் உன்வசம் ஆனதால் அடிமையே.

3 AUGUST 2021


பொன்கொடுத்துப் பெறவும் பொன்வேண்டா தனவான்

மண்கொடுத்துப் பெறவும் மண்கடந்த விண்ணாளன்

பெண்கொடுத்துப் பெறவும் புலனைந்தும் வென்றான்

என்கொடுத்துப் பெறுவதென எனைக்கொடுத்தேன் பெற்றான்.

1 AUGUST 2021


எண்ணும் எழுத்தும் இருவே றென்று

எண்ணிடும் நாள்வரை இருக்கும் விதியே

கண்ணுங் கருத்தும் ஒன்றெனக் கண்டிடில்

விண்ணும் விடியும் மண்ணில் தானே.

31 JULY 2021


ஓட்டைப் பாண்டத்தை ஒட்டறியேன் தட்டழிந்தேன்

சாட்டைப் பம்பரத்தை சுற்றிவிட்டும் சூதறியேன்

ராட்டை நூல்நூற்று தறிக்கனுப்ப ஆள்காணேன்

வீட்டை விலையாக்க உடையானை தேடுறேனே.

30 JULY 2021


ஒருநாள் இருநாளா ஒவ்வொரு நாளுந்தான்

பொருமாது இருந்தேனோ புண்ணியா உனைகாண

வருநாள் என்றேங்கு முள்ளத்தே நீயிருந்தும்

குருடாகி போனேனே குருகிடைக்கா வரைநானே.

29 JULY 2021


இருள்சேர இலைபிறப்பு இருளறிய இலைமறப்பு

இருள்தானே ஆதியொடு அந்தமாய் வருமுறவு

இருள்தானே ஒளிவாழ வழிவிட்ட ஒளிவிளக்கு

இருள்தானே மூலமென்று அறிவதே பேரறிவு.

28 JULY 2021


மெய்யெது பொய்யெது வெனவுல குரைத்தும்

பொய்யே மெய்யாய் கொள்ளுமனங் கொண்டோனை

செய்தவம் மீட்குமென் றுணர்ந்தடங்க சென்றாலும்

பொய்வந் தாளுவதை பிரித்தெடுக்க வாராயோ.

27 JULY 2021


அறஞ்செய்ய வேண்டுமெனில் அடங்குதலே சிறப்பு

மறத்தோடு அறந்தேடில் மறுபிறப்பு தொடர்ந்தமையும்

மறந்தும் பிறன்கேடு செய்வார்க்கு அறங்கூடா

திறத்தோடு மெஞ்ஞானம் சேர்வார்க்கு உய்வே.

26 JULY 2021


கேட்கவே துளதோ கேளாமுன் ஈந்தவனே

தோட்கவே செவியுண்டு தொடவுன் நாதமே

ஆட்கொள காணோமென் றலைபாயுங் கண்களுக்கும்

தீட்சை தந் தாதரித்தால் திண்ணியனா குவேனே.

25 JULY 2021


பெற்றாளும் விட்டகன்றாள் பேரிட்டத் தந்தையுஞ்

சற்றேனும் நினையாது சாய்ந்தவரும் போய்விட்டார்

மற்றோரை மதித்தென் மறுநாளில் இவர்மறைவார்

கற்றோரே கூறிவிடும் கடைதேற வழியேதோ.

24 JULY 2021


வானுண்டு மண்ணுண்டு வளியுண்டு நீருண்டு

கோனென்ற நெருப்புண்டு கொண்டாட மரஞ்செடிகள்

தானுண்டு புழுமுதலா வாறறிவு உயிர்களுண்டு

நானுண்டு எனசொல்ல குருகிடைக்கா தேதுபயன்.

22 JULY 2021


இனிமனம் பொறுக்கேன் இருக்கிலேன் தனியே

பனிமனம் உருகிடில் பார்வைக்குத் தெரியேன்

கனிவுடன் வந்தென் கரம்பற்றிக் கொள்வாய்

புனிதனே உனையன்றி துணையெனக் காரோ.

21 JULY 2021


காற்றுள் நீரும் நீருள் காற்றும்

வீற்றிருந் தருளும் விதியினை உணரார்

கூற்றுள் புதைந்து குறியிலா தாகினார்

ஆற்றுப் படுத்த ஆதியைத் தொழுமினே.

19 JULY 2021


சிறிதே பெரிதாம் பெரிதே சிறிதாம்

மறப்பே நனவாம் நனவே மறப்பாம்

இறப்பே பிறப்பாம் பிறப்பே இறப்பாம்

உறவும் பகையாம் பகையும் உறவே.

18 JULY 2021


உளவரை இருப்பார் இல்லையேல் இறப்பார்

உளதெது என்றுளம் ஊகிக்க இயலார்

அளவிலா உணர்விலே அகப்பட் டழிபவர்

களவிலே கலந்து கரைந்துதான் போனரே.

17 JULY 2021


உடலும் உயிரும் உறவான வரைக்கே

கடலும் மலையும் கண்காண சுகமே

உடல்பலங் குன்றில் உண்ணவும் முடியா

கடல்நிறை காசும் காரியப் படுமோ.

15 JULY 2021


பித்தனென் றேயுன்னைச் சொன்னார்க்கும் பின்தொடர்ந்து

சித்தளித்து சிந்தை மகிழமண வாட்டிகளை

அத்தனேநீ அருளினையே அன்புகொண்டே யகத்திருத்தி

இத்தரையில் போற்றுமெனை ஏற்கா டகற்றுவயோ..

14 JULY 2021


போற்றிப் பணிந்து வாழும் பேற்றினுள்

கூற்றன் நுழையுமுன் குறைகழன் றெழுமின்

ஆற்றுப் படுத்தும் ஆளறிந் தடங்கி

நாற்று நட்டுமின் நமனிலா வாழ்விற்கே.

13 JULY 2021


உண்டது செரிக்க உடல்நலம் சிறக்க

கண்டது பலிக்க கருத்தினால் களிக்க

பண்டது முடிக்க பரமதை நினைக்க

தொண்டருள் இருக்க துணைபுரி இறையே.

12 JULY 2021


அகத்துளே இருளில் அகப்பட் டிருக்க

தகவலே இன்றி தவித்திருப் போர்கள்

செகத்துளே என்று செறிவுடன் மெய்யை

முகத்திலேக் கண்டு முனைந்திருப் பாரோ

11 JULY 2021


மனமொரு மயக்கம் மதியொரு மயக்கம்

தினமொரு துவக்கம் தொடர்வதுப் பழக்கம்

கணமொரு குழப்பம் கதியிலா தெவக்கம்

குணமது நிலையிலார் கொண்டனர் காண்மினே.

10 JULY 2021


உயிருள வரைக்கும் உலகுற உண்டு

அயர்விலா வாழ்வை அமைத்திட நன்று

இயல்புடன் இருந்தால் இயற்கையும் உதவும்

பயமே சாவின் வாகனம் ஆமாம்.

9 JULY 2021


தீதேதுஞ் செய்யாமல் திரண்டுவந்த கொடுமையை

காதேறச் சொன்னாலே கண்கசியும் மனமுருகும்

பூதேவி உலகத்தே புகுந்துள்ள பொய்புரட்டை

காத்தேற்ற வரவேணும் கருணையுள மெய்ப்பொருளே.

8 JULY 2021


ஒற்றிவந்த ஆயுளும் நிதிநிலையும் கல்வியும்

பற்றிய கர்மாவும் பதறித் துடித்திட

முற்றிய மரணமும் ஆனவிவ் வைந்தும்

சற்றுமே மாறாது உனக்கமைந்த வண்ணமே.

7 JULY 2021


தனக்கொரு ஆதரவு தாரணியில் இலையென

மனக்கணக்கு போட்டு மதிமயங்க வேண்டாம்

உனக்கொரு உறவாம் உன்கை காலென்று

தினம்நினைத்து இறைதொழ திடம்வருந் தானே.

6 JULY 2021


பட்டதுயர் போதுமினி வாராது வேண்டுமெனில்

துட்டர் தொடர்பேதுந் தொடராது காத்தலுடன்

நட்டமுள காரியத்தில் நாடாது ஒழிதலுடன்

இட்டமுடன் குருமொழியை இருத்திடுவீர் இதயத்தே.

5 JULY 2021


ஒன்றிருக்க ஒன்றில்லை உள்ளபடி உணர்வார்க்கு

என்றுமிது மாறா நியதியென் றறிந்தால்

அன்றிருந்த மேனிக்கு அழியாது இருந்திடலாம்

கன்றினுக்கு தாய்பசு ஊட்டாதோ கனிந்து.

4 JULY 2021


தோற்றம் மனிதன் குணமோ மிருகம்

மாற்றம் வேண்டும் மனதில் உடனே

ஆற்றல் விரயம் ஆகும் முன்னே

தேற்றம் தெரிந்து தெளிதல் நலனே.

3 JULY 2021


உற்றார் கைவிடினும் உனைமண்ணில் வேண்டிப்

பெற்றார் கைவிடினும் தனக்குபல மாமென்ற

பெற்றதுவும் கைவிடினும் சேர்த்தபணம் கைவிடினும்

அற்றம்வரை காப்பான் ஆண்டவனென் றேயிரு.

2 JULY 2021


எல்லாம் முன்வினையின் மூலமென நம்பார்க்கு

எல்லாம் இழந்ததுபோல் எப்போதும் அழுத்தமுண்டு

கல்லாரும் கற்றோரும் எய்துவது வினைவழியே

நல்லார் தொடர்பமைய நல்வினையால் சுகமுண்டே.

1 JULY 2021


யாரிருந்தென் தன்மனத்தை தானாளத் தெரியார்க்கு

ஊரிருந்தும் உறவிருந்தும் உள்ளசுகம் கிட்டார்க்கு

மாரிபிழை யாதுபெய்தும் விதைக்காது விட்டார்போல்

காரிருளில் சிக்கிநின்று கலங்குவா ராகுவரே.

30 JUNE 2021


குருபார்க்க கோடிநன்மை குவலயத்தார் சொல்வார்

குருபார்க்க கண்மலர்ந்தால் குவலயத்தை வெல்வார்

குருபார்க்க பதிவழிய குருபாதம் பணிவார்

குருபார்க்க விதிமாற குருநாமத் திருப்பார்.

29 JUNE 2021


இருப்பார் போலிருப்பார் இல்லாதே போயிடுவார்

உருப்படியாய் உதவிடத்தான் உலகத்தே யாரமைவார்

கருப்பையுள் புகுந்தன்றே கடுங்காலன் உறவுண்டு

கருத்தறிந்தால் கலங்காது காலத்தை வெல்லலாமே.

28 JUNE 2021


அறியா திருந்தவெனை

அகம்புகுந் தறிவித்து

குறியா குவலயத்துக்

குடிமைதனைக் குணமேற்றி

முறையா வாழுதற்கு

மூட்டுவித்த முதற்பொருளே

இறையா உலகுணர

எனக்கமைந்த பெரும்பேறே.

27 JUNE 2021


நின்னால் விதைத்தது நின்பால் விளைந்தது

என்றிதை ஆய்ந்து தன்பால் அமைத்திட

துன்பால் வருந்துயர் இன்றே களைந்திடும்

அன்பால் உணர்ந்தவர் என்றும் நிலைப்பரே.

26 JUNE 2021


கற்றதுக் கல்வி பெற்றது அறிவு

அற்றதுத் தவறு அடைந்ததுத் தெளிவு

உற்றதுத் துறவு விற்றது உலகு

நற்றவப் பயனால் நலிவதுப் பிறப்பே.

25 JUNE 2021


நலம்செய்ய வென்னை

ஆளாக்கி விட்டதெய்வம்

பலம்தந்தே காக்கும்

பயமெனக் கேதுமில்லை

வலம்வந்து ஆளுகிற

கோளுமினி உதவிநிற்கும்

தலமறிந்து கொண்டேன்

தத்துவம் ஆகிநானே.

24 JUNE 2021


சீர்வேண்டின் சிரஞ்சேரும்

செம்பொருளைச். சேர்க

பேர்வேண்டின் பிழையில்லா

ஒழுக்கத்தில் உறைக

ஊர்வேண்டின் உலகுளோர்க்

குதவிபசி யாற்றிடுக

யார்வேண்டும் நெடும்பயணத்

துணையென் றுணர்ந்துபணி.

23 JUNE 2021


மூண்டது முன்வினை மயக்கத்தில் பின்வினை

ஆண்டது தன்வினை அழிப்பது எதிர்வினை

சீண்டிடும் கோள்வினை சிதைப்படும் கொள்வினை

மாண்டிடும் முன்னிதைத் தேர்ந்தவர் பெரியரே.

22 JUNE 2021


சினமும் பிணக்கும் சிறைப்பட வைக்கும்

தனக்கும் பிறர்க்கும் உறவைக் கெடுக்கும்

கணக்கும் வழக்கும் கர்மா தொடக்கம்

இணக்கம் எவர்க்கும் ஏற்றம் தருமே.

21 JUNE 2021


விட்டது தொடர்வதை விவரமாய் புரிய

சட்டென உரைப்பார் கண்டதும் உண்டோ

கெட்டது வாழ்வென புலம்பித் திரிவதால்

மட்டிலா மகிழ்வை மனங்கண் டிடுமோ

20 JUNE 2021


பார்வைப் பதித்த இடத்தினில் தானே

பார்க்கப் பரம்பொருள் பக்குவ மாகும்

வேர்த்து நடுங்கி நழுவிய பேர்க்கு

கூர்த்த விடையும் கூடாதே போம்.

19 JUNE 2021


மனமும் அறிவும் ஒருவருக் கொருவர்

இனமென அறியா இவ்வாழ் வினிலே

தினமும் விடிவைத் தேடியே திரிந்து

சினமுடன் எரிந்து சிதைவதுஞ் சரியோ

18 JUNE 2021


பற்றும் விட்டார் பரிதவித் திட்டார்

சுற்றம் அற்றவர் சுகமிழந் திட்டார்

குற்றம் கோடி குணத்துறைந் திருக்க

முற்றுந் தெளிவோ அதுபகல் கனவு

17 JUNE 2021


உண்டுறங்கி வாழுவதே உத்தமம் என்றெண்ணி

கண்டுயின் றுக்கிடப்போ ரேகேளும் மண்டுயிலில்

மாட்டத்தான் போவீ ரதுமுன்னே இப்புவியில்

ஈட்டத்தான் வந்தீர் அறம்.

16 JUNE 2021


கொடுவந்தப் பொருளுமுண்டு கொடுபோகும் பொருளுமுண்டு

நடுநின்றுப் பேசுவதில் நமக்கேது பலமுண்டு

இடுமுன்னர் இதையுணர இனியேனும் வழிதேடு

படுவினைக்குப் பாலூற்றி பாவியாய் போவதேனோ.

15 JUNE 2021


கோடிப் பிறப்பில் ஓடிப் பிழைத்தும்

தேடி அடையா பிறவியின் இரகசியம்

நாடி அடைந்தார் நமன்விட் டகல்தலும்

கூடிப் பிறத்தலும் கூடா தமையுமே.

14 JUNE 2021


தூக்கமும் முழிப்பும் தோல்வியும் வெற்றியும்

ஏக்கமும் எழுச்சியும் ஏந்தலும் வீழ்ச்சியும்

ஆக்கமும் அழிப்பும் அடைதலும் இழப்பும்

தாக்கினும் வாழ்விதன் தத்துவம் நின்னதே.

13 JUNE 2021


எதுவரினும் ஏற்கும் மனமுடைத்தால் தோற்கும்

அதுவரினும் அஞ்சேலென் றாறுதல் அளிக்கவல்ல

பொதுநடத் தரசிருக்கப் போவெங் கொழிவதேன்

இதுநமக் கிட்டதென இனியிருப்போம் மகிழ்ந்து.

12 JUNE 2021


நல்லார்பால் சென்று நலமுரைக்க எண்ணிடவும்

நல்லார்க்கே கூடுமதால் நாளும்மெய் சொல்வாராய்

வாழத் தலைப்பட்டால் வாராது தீவினைகள்

பாழும் நிலைமாறிப் போம்.

11 JUNE 2021


அடிதானவர் கொடுத்தாண்டெனை அறிவால்தினஞ் சிறக்க

படிதானதை எடுத்தேதினம் பகர்ந்தேன்யுல கறிய

கொடிபோன்றொரு மனந்தானவர் மதியோடிழைந் தாட

பிடியாதெனை பிழையாயொரு பிறப்பாய்வரும் பேயே.

10 JUNE 2021


ஒன்றடைய ரெண்டேந்தி ரெண்டில் மூன்றூற

முன்னதுவால் ரெண்டும் முற்றாது தொடர்ந்தலைய

என்னதென நான்கும் ஐந்துறவில் தடுமாற

இன்னதென ஆறிருந்தும் அறியாமல் ஏழோ.

9 JUNE 2021


எட்டில் நாலுகண்டு எழுபிறப் பறுக்க

வட்டில் சோறுஉண்ண வள்ளல் வருவாரோ

கட்டில் சுகங்கண்டு காலத்தே கட்டுண்டால்

எட்டிரண் டறிவும் புரியாது போகாதோ

8 JUNE 2021


பொன்மரை கோடி கிட்டும்

புண்ணியம் வந்தடங்கும்

அன்புளோர் அரவணைப்பு

ஆறுதலா யமையவரும்

துன்பிலா சூழலாலே

திடமனம் தெளிவிலாடும்

இன்பிற்கு குறைவுமில்லை

இதயத்தில் குருவிருக்க...

7 JUNE 2021


தொடுவார்கரம் வருநாள்தினம் மனம்பார்த்திருந் தேங்க

இடுவார்வரம் தவறாதென இறுமாந்தறி ஓங்க

நடுவார்விதை நமக்காயொரு புளிமாவவர் போல

படுவார்விதி யினிமேலெனக் கிடையாதென துணிபே.

6 JUNE 2021


ஊனக்கண் உதவாது முன்பின் அறிய

ஞானக்கண் திறவாது தன்மனம் முனைய

மோனக்கண் கொண்டார்க்கு முடிவில்லை விடிய

வானக்கண் வழிவந்தார் சொல்லாமல் தானே.

5 JUNE 2021


பெய்வதார் நனைவதார்

பெரும்பிழையா லறிகிலார்

செய்வதார் பெறுவதார்

சிந்திக்கா தலைகிறார்

பொய்வழிப் புகுந்ததால்

புண்பட வாழ்கிறார்

மெய்தவத் தாலன்றி

மெய்ப்பொருள் காண்கிலாரே.

4 JUNE 2021


ஆதியை அந்தமாய் காணவேண்டி முயலுவோர்

நீதியைக் காத்திடும் குணந்தனைப் பேணுமே

சோதனை யானதை சாதனை யாக்கினால்

வேதனை மாளுமே வினைகழன் றோடுமே.

3 JUNE 2021


மெய்யுரைப்பார் மேதினியில் மகிழ்ந்தென்றும் வாழ்க

பொய்யுரைப்பார் தொடர்பற்று புனிதங்கெடா துயர்க

பெய்யுமழை போல்நல்லார் பிழைகழன்று சிறக்க

செய்யுவினை யறத்தோடு சேர்ந்தார்க் குதவவே.

2 JUNE 2021


இருக்கும் வரைக்கும் இதுபோது மென்றெண்ணி

இருப்பதிலே கண்வைப்பார் இதுமுன்னை பலனறியார்

இனிபோகும் வழிக்கேது செய்தோமென் றுணராது

இனிநரக மெய்தற்கே இடும்பிடியாய் இருக்கின்றாரே.

1 JUNE 2021


கற்றாலும் கதியில்லை கற்றபடி நில்லார்க்கு

பெற்றாலும் பயனில்லை பேணியதைக் கொள்ளார்க்கு

உற்றாலும் உறவில்லை உரிமையை மதியார்க்கு

குற்றமிலா நெஞ்சிற்கு குறையேது மில்லையே.

31 MAY 2021


பரன்குடி கொண்டவிடம் பாழ்குகையோ மலையோ

அரன்குடி கொண்டவிடம் யென்றுணர்ந்து தேர்ந்து

வரன்குடி கொண்டுதினம் வாழ்த்தயிவ் வாழ்வினிலே

உரன்குடி கொண்டார்க்கே உய்யவழி யுண்டே.

30 MAY 2021


பட்டகடன் தீருவரை பங்களிக்க வேண்டாவோ

சுட்டபுண் ஆறுவரை சரிசெய்ய வேண்டாவோ

இட்டமுடஞ் செய்ததற்கு ஈடுகட்ட வேண்டாவோ

தொட்டகுறை தெளிவடைய துன்பத்தை ஏல்மனமே.

29 MAY 2021


சொல்லுக பிறர்க்கின்பந் தருமாறுங் கேட்போரை

வெல்லுமா றமைத்தும் வேண்டுமினி என்னுமாறும்

செல்லுமிட மெங்குஞ் சேர்ந்துவந் துய்க்குமாறும்

கொல்லுமிடத் துந்துணைத் தந்தென்றுங் காக்குமாறே.

28 MAY 2021


வானேற வழிதேடி மலைஏறு வோர்க்கு

தானேறும் பதிபற்றித் தெளிவேது மில்லை

மீனேறும் மதிவாசல் மொய்த்துணரப் பெற்றால்

கோனேறும் அரியணையை அலங்கரிக்க லாமே.

27 MAY 2021


யானிங்கு வந்தபணி உலகிங்கு உணருமினி

யான்வேறு அல்லவென் றுயிரனைத்தும் எண்ணும்படி

வான்மண்ணும் வளிவன்னி வப்பென்று வெல்லாமும்

யானிருக்கக் கண்டபின் யான்வேறு ஆகுவனோ.

26 MAY 2021


உள்ளா ரில்லா ரெனபேதம் பாரேன்

உள்ளத்துள் நல்லார்க் குதவமட்டும் நினைக்கேன்

பள்ளத்துள் வீழ்ந்தார்க்குப் பரிந்துதவும் பழக்கம்போல்

அள்ளி அணைத்திடவே ஆவலுற்றேன் மண்ணுயிரை.

25 MAY 2021


மண்மகிழ வாழானை வான்மகிழ்ந் தேற்றிடுமோ

விண்மகிழ குடியேற எண்ணுவதால் பலன்வருமோ

கண்கருணை ஒளிவீசி காருண்ய செயல்காட்டி

பண்ணிசைக்கும் மனத்தோடு பல்லுயிரைப் பேணே.

24 MAY 2021


மண்மகிழ வாழானை வான்மகிழ்ந் தேற்றிடுமோ

விண்மகிழ குடியேற எண்ணுவதால் பலன்வருமோ

கண்கருணை ஒளிவீசி காருண்ய செயல்காட்டி

பண்ணிசைக்கும் மனத்தோடு பல்லுயிரைப் பேணே.

24 MAY 2021


உன்னைநீ பகைத்தாலோ உலகோரை வெறுத்தாலோ

அன்பில்லா அகத்தோடு உயிர்வாழ்ந்து வந்தாலோ

இன்னும்நீ பலபிறவி பிறந்திழைக்க வேண்டுமென

இன்றுணர்ந்து இப்போதே மாறிவிடு துணிந்து.

23 MAY 2021


எதுவேண்டு மென்றறியு மறிவுமுதல் வேண்டும்

அதுகிடைக்க குருநாதன் ஞானந்தர வேண்டும்

இதற்குயார் குருவென்று இனங்காண வேண்டும்

அதற்குமனம் அடங்கியுயிர் நேசமுற வேண்டும்.

22 MAY 2021


கருணையா லன்றிவெறுங் கருத்தால் பலனில்லை

அருவமே யெங்கும் ஆளுவதை உணர்ந்து

உருவமே பணிந்து உள்ளொளியை துலக்கி

பருவமே போகுமுன் பரனடித் தேடுமே.

21 MAY 2021


ஓருயிரும் வாடமனம் சகிக்கேன் உலகத்துள்

யாருமினி பசித்திருக்க விரும்பேன் காலத்துள்

சாருமினி வாழ்விலன்பு பெருக்க யாவருமே

ஓருயிராய் நினைமின் மாகருணை உதவுதற்கே.

20 MAY 2021


தீதிலா நெறியே தெய்வ நெறியாம்

சூதிலா வாழ்வே சுகம்பட வழியாம்

வாதிடா தவரவர் வழிசெல்ல நலமாம்

ஆதியைப் போற்றிட அனைவரும் உறவே.

19 MAY 2021


இல்லார்க் கீந்தும் இயலார்க் குதவியும்

கல்லார் தமக்கு ஞானங் கொடுத்தும்

நல்லார் ஆகவே சந்ததி வளர்த்தும்

பல்லோர் போற்ற வாழுதல் கடனே.

18 MAY 2021


தூய மனமும் துவழா குணமும்

காய பலமும் கருத்தில் நலமும்

நேய உறவும் நேர்மையுந் திறமையும்

ஆய சுகமும் ஞானவெளி யடியருக்கே.

17 MAY 2021


நல்லார் யாவருக்கும் நாம்பணிதல் பலனாமாம்

நல்லா ரல்லாரை நாம்ஒதுக்கல் தவறாமாம்

நல்லாராய் நாமிருக்க நமக்கிங்கு எல்லாரும்

நல்லாராய் தெரிவரென்று நல்லாரா யாகுவமே.

16 MAY 2021


நல்லார் சூழவும் நன்மையே பெருகவும்

அல்லல் தருபவர் அருகுவரா தகலவும்

எல்லா வளமும் எப்போதும் இருக்கவும்

செல்வாக் குயரவும் ஞானவெளி யடியருக்கே.

15 MAY 2021


பயமிலா வாழ்வும் பகையிலா நட்பும்

துயரிலா தொடர்பும் தடையிலா தொழிலும்

அயர்விலா மனமும் அழிவிலா உயர்வும்

தயவுடன் கிடைக்கும் ஞானவெளி அடியருக்கே.

14 MAY 2021


வருநாள் எல்லாம் வளமும் பெருமையும்

திருநாள் ஆகவே திரவியம் பொங்கவும்

பெருநாள் போன்று புனிதம் மலரவும்

குருநாள் தொழுவர் ஞானவெளி அடியரே.

13 MAY 2021


நல்ல நினைவோங்கும் நற்செயலே தினமமையும்

அல்லல் பறந்தோடும் அடியர்குலம் துணைசேரும்

இல்லம் கோயிலாகும் இறையுணர்வு நின்றாளும்

வல்லமை மேலோங்கும் ஞானவெளி அன்பருக்கே.

12 MAY 2021


அடல் செய்தல் நலமாகும் தன்னை

விடல் வேண்டின் பொறியை கெடுமுன்

படல் வேண்டும் குருபார்வை பாங்காய்த்

தொடல் வேண்டும் துணிந்து.

11 MAY 2021


வட்டில் சோறூட்டி வளர்த்த வன்னையென்

கட்டில் சுகங்காட்டி அணைத்த மனைவியென்

பட்டில் உடைகட்டிப் பார்த்தப் பிள்ளையென்

எட்டில் எனைகாட்டி மறைத்தானின் பின்னே.

10 MAY 2021


பேசா எழுத்தைப் பிழையிலா காட்டி

ஆசா நிகளம் அற்றிட மாற்றி

கூசா முனைக்குள் குன்றொளி ஏற்றி

ஈசா வென்றெனை இருத்தினன் தானே.

9 MAY 2021


காடும் மலையும் கடந்தனன் ஆயினும்

வீடும் பேறும் விளக்குவா றில்லை

நாடும் உறவும் நம்முடன் ஆயினும்

ஓடும் மூச்சினை கட்டுவா ரிலையே.

8 MAY 2021


அழியும் உடலென்று அலமாந்து போனீரோ

பழியும் வருமென்று பயத்தோடு மாண்டீரோ

விழியும் திறக்காது விதிக்காட் பட்டீரோ

வழியுண்டு கண்டீர் குருபாதம் பணிந்தே.

7 MAY 2021


வரமும் சாபமும் வாய்க்கும் வழியினை

உரமுட னுணர்ந்தார் உள்ளொளிப் பெறுவார்

நரமிதைத் தாண்டி வானூர் செல்ல

பரம்வந் தல்லால் பயனிலை தானே.

6 MAY 2021


சாகா தலையினை சாரா தெவரும்

வேகா காலில் வெந்திட முடியா

போகா புனலை புணர்ந்தவர் தாமே

ஆகா தெல்லாம் ஆட்டிப் படைப்பார்.

5 MAY 2021


சொல்கேட்டு நடப்போனை சொந்தமாய்க் கொண்டிடு

பல்லிளித் திருப்போரை பக்கம்வரா தாக்கிடு

தொல்லை தாராரை தொடர்ந்திட விட்டிடு

நல்லொழுக்கம் உள்ளோனை நாளும்நீ தொழுதிடேன்.

4 MAY 2021


பயனுளப் பேசி பசித்தோர்க் குதவி

கயமை விலக்கி கல்வியைப் பரப்பி

தயவே நிறைந்து தவம்தின மியற்றி

இயல்புடன் இருப்பான் ஞானம் உணர்ந்தான்.

3 MAY 2021


மெய்யைப் பெருக்க மருந்தொன் றுண்டு

மெய்யோ சுருங்கில் மரணமிங் குண்டு

மெய்யிலார் வாழ்விலே தொடர்வது துன்பு

மெய்யே நிலைக்க உதவுவ தன்பு.

2 MAY 2021


மெய்யேதென் றறியொணா மனுவர்க்குச் சொல்வன்

மெய்யே புலனைந்தை மெய்ப்படச் செய்யுமாமே

மெய்யுள் மெய்யிலாப் போகினைம் பூதமும்

பொய்யாகி மெய்யைமண் ணிற்கிடும் மெய்யே.

1 MAY 2021


தேடித் திரிந்தாலும் தென்பட்டால் கொள்வதில்லை

நாடி அலைவதிலே நாளும் முனைந்திருப்பர்

கோடிக் கொண்டதுப்போல் கருத்தேற்றி கனவுலகில்

வாடி வதங்கிடுவர் இவர்மீள்வ தெந்நாளோ.

30 APRIL 2021


பொய்யென்ற நஞ்சுண்டு மாள்கின்ற மனுவோரே

மெய்யென்ற வமுதுண்டுக் கரைசேர லாமே

அன்பென்ற விதைநீக்கி பகையென்ற சதையுண்டு

இன்பென்ற தடம்விட்டு துன்பேக லாமோ.

29 APRIL 2021


நானே நீயாக விருந்தும் நீமட்டும்
இருப்பதாக நினைக்கிறாயே அதுமாயை

நானே உனைக்காட்டும் கண்ணாடி என்னை
உற்றுப்பார்க் காதிருப்ப துவுமாயை

நானே உன்னாதி அந்தமென்று ரைத்தும்
உனையறிய முயலாத துவுமாயை

நானே உன்மத்தி யில்வாசம் செய்கிறேன்
கண்மூடிப் பாரென்னைப் போகுமாயை.

28 APRIL 2021


பற்றில்லா பரமனடி
பற்றிபடி ஏறுதற்கு

கற்றறிவு கைகொடுக்கா
கதிவேறு வழியென்று

சிற்றறிவு அறிவதென்றோ
சிந்தைமெய் சீர்தேடி

உற்றதொண்டை செய்யார்க்கு
உய்வில்லை உண்மையே.

27 APRIL 2021


கெட்டறிவுத் தேடுவார்க்கு கதியில்லை மண்ணில்

பட்டறிவுக் கொண்டார்க்கு பலனில்லை விண்ணில்

தொட்டறிவுப் பெற்றார்க்கு திறமில்லை எண்ணில்

வீட்டறிவு உள்ளவர்க்கே உயிருண்டுச் சொல்லில்.

26 APRIL 2021


கற்றதனில் கடைதேற வழிதேடி மெய்ப்பொருளை

உற்றதனில் கண்டு உலகுளோர் உய்திடவே

பெற்றதனைப் பேணி பெரும்பொருளாய் அவர்க்கீய

நற்றவத்தார் முயல்வர் நமனில்லா வாழ்வடைய.

25 APRIL 2021


அடுத்தாரை அணுதினமும் பகைத்தார்க்கு சுகமெங்கே

கெடுத்தாரைக் கண்டாலும் வையாதார்க் கீடெங்கே

விடுத்தாரை வினவாது விட்டொழிந்தார்க் குறையெங்கே

மடுத்தாரைச் சேராது வளர்ந்தோங்கும் மதியெங்கே.

24 APRIL 2021


நெஞ்சில் வஞ்சம் இல்லார் உறவைக்

கெஞ்சிப் பெற்றிட உயிர்கள் எண்ணும்

மிஞ்சும் விதியை மாற்றும் மதியோ

அஞ்சில் தஞ்சம் புகுந்தார்க் கமையும்.

23 APRIL 2021


அடக்கம் இல்லார்க் கமைதியு மில்லை

நடத்தும் வினையில் நற்பலன் இல்லை

திடத்துடன் இருக்க தெளிவுப் பெற்றிட

கிடக்க வீழுமுன் குருவின் பாதமே.

22 APRIL 2021


நாடி பார்க்க நோய்க்குறித் தெரியும்

நாடிப் பார்க்க நோயெலாம் மறையும்

நாடியைப் பார்க்க பரமங்கே தோன்றும்

நாடி யுள்புக நரமறைந்து போமே.

21 APRIL 2021


அஞ்சுதல் வேண்டாம் அன்புளம் தங்க

கெஞ்சுதல் வேண்டாம் தன்விதி உணர

நஞ்சினி கொல்லா நற்குரு சேர

தஞ்சமாய் அறிவிலே தான்சரண் ஆகுமே.

20 APRIL 2021


பூட்டிய மனத்துள் புதைந்துக் கிடப்பது

கூட்டிய வினையின் ஆவண மன்றோ

ஈட்டிய குருவின் இருவிழிப் பார்வையே

ஓட்டிடும் முன்வினைக் கர்மப் பதிவையே.

19 APRIL 2021


வாக்கில் ஔவை மனத்தில் வள்ளல்

நோக்கில் குறளார் உடம்பில் மூலன்

போக்கில் புகழார் புறத்தில் கரும்பார்

நீக்கில் என்னைக் காண்பதிங் கெவரோ?

18 APRIL 2021


தன்புத்தி எட்ட தவயுக்தி உதவும்

தன்புத்தி தேட குருபக்தி கூடும்

தன்புத்தி யாலே குருபாதம் கண்டு

தன்புத்தி யற்றார் தவயோகி யாமே.

17 APRIL 2021


புறத்தேக் கிடைப்பது பொதுவறி வென்று

புறங்கடந் தகத்தே தன்னறி தேடுமின்

அவரவர் வினைக்கு அவரவர் விடையை

அவரவர் குருவே அளித்திட வியலுமே.

16 APRIL 2021


யார்வாய்க் கேட்டு தன்வாய் மூட

ஊர்வாய்ப் பயந்தா உலகுவிட் டோட

சீர்வாய்ச் செப்பும் செம்பொருள் விளக்கம்

தேர்வார் தமக்கே வானா மிர்தம்.

15 APRIL 2021


தொடுவார்த் தொட்டால் கண்மூன் றாகும்

கெடுவாய் மறைந்து சொல்பல மோங்கும்

இடுவாய் தெரிந்து வினைபலங் குன்றும்

நடுவாய் நின்றால் நமன்பயம் போமே.

14 APRIL 2021


ஏடுதந்தான் என்னை எழுதவைத்தான் மன்றில்

கூடும் படிக்கெனை கூத்தும் இட்டான்

பாடுகின்றான் பதங் காட்டுகின்றான் யாண்டும்

தேடும் நிலைதவிர்க்க ஒன்றி விட்டான்.

13 APRIL 2021


பகைக்கா தெவரையும் பண்புடன் பேணுமே

நகைமுகத் தோடே நட்புடன் வாழுமே

திகைப்புடன் எதற்கும் பின்தொடர்ந் திடாது

மிகைக்கா வியல்புடன் மேன்மை பழகுமே.

12 APRIL 2021


ரெண்டை ஒன்றாக்குங் கணக்கில் தேர்ந்தார்க்கு

அண்டம் முழுதுசுற்ற அருகதை வாராதோ

பிண்டம் பிசகாது பித்தும் பிடிக்காது

பண்டை வினைமுடிக்க பரந்தான் உதவாதோ.

11 APRIL 2021


கிடைத்தது வரியவிப் பிறவியென் றெண்ணி

உடைத்ததைத் தெரிந்து உயர்ந்திடு மின்றே

மடைத்தலை கொக்காய் மனதினை ஓம்பி

விடையறிந் தகத்தே குடிபுகு வீரே.

10 APRIL 2021


இல்லறம் மண்ணில் இனிதெனப் பேணி

நல்லறத் தோடே நாட்டோர்க் குதவி

பொய்யை சினத்தை அறவே தவிர்த்து

மெய்யைக் காத்து வாழ்தல் சிறப்பே.

9 APRIL 2021


நல்லார்வாய் சொல்கேட்டு நலமடைய விரும்பார்க்கு

பொல்லாங்கு தூரமில்லை புண்ணியமுஞ் சேர்வதில்லை

எல்லாமு மெமக்கறியு மென்றிருப்பார் இறுமாப்பில்

செல்லாதே செம்பொருளின் களிம்பறுக்குந் துணிபு.

8 APRIL 2021


பொய்யே கேடாய் பிறப்பை விளைக்கும்

பயமே விடமாய் உயிரை வதைக்கும்

தயவே தெய்வ நிலையில் இணைக்கும்

சுயமே உணர்ந்தால் பிறவி அறுக்கும்.

7 APRIL 2021


அகரம் உகரம் அறிந்த பேர்க்கு

சிகரம் வாய்க்கத் தடைகல் ஏது

நகரம் மகரம் பயின்ற பேர்க்கு

பகரும் வாக்கில் பிழைகிடை யாது

வகரம் உணர்ந்து வாழ்ந்திடும் பேர்க்கு

வசியம் எதிலும் குறைவு படாது

யகரம் கைவசம் ஆயின பேர்க்கு

யமனும் எதிர்வர துணிவிருக் காது.

6 APRIL 2021


நஞ்சுண்டும் இறவாத நலமுண்டு கண்டாய்
நஞ்சும் உருகிவிடும் அன்புள்ளங் கண்டால்

வஞ்சம் உள்ளோர்க்கு வாய்க்காது தெய்வம்
வாய்மையில் குடியிருக்க வருமோசொல் அருகில்

பஞ்சம் பட்டினிக்கு பலியாகா திருக்க
பகுத்துண்டு வாழ்வோர்க்கு பயமில்லை மண்ணில்

தஞ்சம் குருபாதம் என்றடங்கி கிடப்போர்
தனியில்லை எந்நாளும் தவசீல ராமே.

5 APRIL 2021


அகத்துள்ள பொருளை இனங்காண முயல்வோர்

செகத்துள்ள குருவை தடங்காண வேண்டும்

செகத்துள்ள குருவை அகத்தமர்த்தி யன்றோ

அகத்துள்ள இருளில் அருள்தேடக் கூடும்.

4 APRIL 2021


குற்றம் காணும் குணமுடையோர்
குற்றம் நிறைந்த மனமுடையோர்

அற்றம் தேடும் கனவுடையோர்
அத்தனை நாடும் இயல்புடையோர்

சுற்றம் பேணும் சிறப்புள்ளோர்
சிந்தை முழுதும் அன்புள்ளோர்

பற்றற வாழப் பயின்றோரே
பரமனை அடையத் தெளிந்தோராம்.

3 APRIL 2021


ஏதுளதோ அதைக்கொடுப்பர் இகழ்வாரும் அம்மட்டே

தீதுளதால் அதைச்செய்தர் தீயாரைத் திட்டியென்

சாதுளத்தில் உள்ளதெலாம் சன்மார்க்கம் சகலருக்கே

போதுமிது அடங்குதற்கு பொறுமைகொள் புனிதனாக.

2 APRIL 2021


போம்வழி ஈதென புரியார் தமக்கு

ஆம்வழி என்றும் அகப்படா தன்றோ

சாம்வழி நீத்து சடுதியில் மீள

யாம்வழி காட்டும் இருவிழி பொத்தே.

1 APRIL 2021


ஊனக்கண் உதவாது முன்பின் அறிய

ஞானக்கண் திறவாது தன்மனம் முனைய

மோனக்கண் கொண்டார்க்கு முடிவில்லை விடிய

வானக்கண் வழிவந்தார் சொல்லாமல் தானே.

31 MARCH 2021


பன்மொழியில் முன்மொழியாய் என்தமிழே நீஇருக்க

உன்பெருமை உலகறிய செய்வதொன்றே என்கடனாம்

தன்னகத்தைத் தான்தடவிக் கற்போர்க்கு நீதெரிவாய்

அன்பிருக்கும் இடமிருந்து உயிர்த்தெழும் சுனையென்றே.

30 MARCH 2021


அம்பலங் கண்டு அம்பலங் கொண்டார்

தம்பலம் அளக்க யார்க்கிங் கேகும்

வம்பெலாம் விட்டு வழித்துறைக் கண்டார்

மும்மையும் உணர்ந்த முதற்பொரு ளாமே.

29 MARCH 2021


அன்புக்கு மிஞ்சிய ஆசானு மில்லை

அன்பை அடைக்கும் எல்லையு மில்லை

அன்பைப் பெறபணச் செலவு மில்லை

அன்பை விட்டொரு கதியு மில்லை

இருந்தும் மனமே

உனக்கேன் அன்பில் அக்கறை இல்லை.

28 MARCH 2021


தெரிந்ததைச் சொல்

தெரிய வேண்டியதைக் கேள்

அடையவேண்டியதுக் கிடைக்கும்

அற்புதங்கள் நிகழும்

வாழ்வோம்

வாழ்விப்போம்.

27 MARCH 2021


மெய்யை மெய்யுள் கண்டிட வேண்டின்

பொய்யை விட்டொரு புனிதரை நாடி

பொய்யை மெய்யாய் மாற்றக் கண்டுபின்

மெய்யாய் அவர்கழல் வீழ்தல் நலனே

26 MARCH 2021


கனவும் நனவும் ஏதென் றறிகிலார்

நனவே கனவாய் இருப்பதைப் புரிகிலார்

மனமே மூடியிவ் வாழ்வினை நடத்திட

மனந்தான் திறக்கா நாள்நன வாமோ.

25 MARCH 2021


பதியுடன் பதிந்த பலநாள் கிழவி

விதியுடன் மீண்டு வீறிட் டெழுந்து

கதிபெற காயக் கணக்கதை மாற்றி

அதிசுகத் தாலே ஆயினள் கன்னி

24 MARCH 2021


அருளானவர் அருள்வாரென இமைமூடிட மறக்க

பொருளானதை நினைக்காமனம் உதவாதென மறுக்க

கருவானது மமையாதினி கலைமேகமே மறைக்க

திருவானது தொடர்பானதும்

உருவாக்கின தெனையே.

23 MARCH 2021


நின்னதை என்னதாய் நினைத்ததால் வந்ததே

பின்னலும் பிணக்கும் பிணியுமாய் மண்ணிலே

உன்னதை என்னதாய் நினைக்கிலேன் ஐயகோ

உன்னிடம் கொடுத்தபின் காண்கிலேன் என்னையே.

22 MARCH 2021


ஒருவிதை ஊன்றி ஒருமரம் தோன்றி

கருநிலைக் கூட்டி காய்கனி யாக்கி

அருவத் திருந்ததை உருவத் தேற்றி

பருவத் தேடலில் பறந்தது வீணே.

21 MARCH 2021


நல்லம் நல்லம் நமக்கந்த ஏழும்

அல்லல் அகற்றும் அரவிரண் டோடும்

வல்லமை வாய்ந்த வளிமுத லைந்தும்

சொல்லுக் கடங்கும் புவிவான் தொட்டே.

20 MARCH 2021


பற்றுக்குப் பற்று

பயன்படுவ தெப்போ

பற்றிலா இடத்தில்

பற்றும்போ தல்லோ

உற்றுப்பார் உன்னுள்

கற்றுக்கொள் என்பார்

வெற்றுத்தாள் போலே

இல்லார்க்கு பயனோ...

15 MARCH 2021


தன்னைச் சூடேற்றி

தானெரிந்து போவதனை

இன்னும் அறியாதே

இருக்கின்ற மாநிடர்க்கு

என்ன சொல்லுவதோ

கோபகாம நெருப்பணைக்க

இன்பம் வெளியில்லை

உள்ளென்று உணருவதே.

14 MARCH 2021


செத்துப் போகவோ பெத்துப் போட்டனள்

இத்துப் போகுமுன் வித்துப் போட்டனர்

கத்துத் தேறுமுன் கடையைக் கட்டினர்

பித்துப் பிடித்ததோ சித்துப் பிறந்ததே..

13 MARCH 2021

7

Steps for your Success

24/7

Connectivity with Master