உள்ளே....
கவிஞர் இராஜ காந்தீபன் அவர்கள் மிக இளவயதில் குருவருளை நிரம்பப் பெற்றவர்.
குருவருளின் துணையோடு திருவருளை உலகுக்கு உணர்த்திட விழைபவர்.
தன்னை அறிந்தவர்.
தன்னை அறியும் கலையைக் கற்றதால் தனக்குள்ளே இருக்கும் தலைவனையும் அறிந்தவர்.
வடலூர் வள்ளற்பிரான் காட்டிக் கொடுக்க இராஜ காந்தீபன் கண்டெடுத்த விளக்கே " சன்மார்க்க ஜோதி " .
ஜோதி தரிசனத்தை இராஜ காந்தீபன் மட்டும் கண்டால் போதுமா ?
தமிழர்கள் அனைவருக்கும் காட்ட வேண்டாமா?
கண் படைத்ததின் பயனே மணிக்குள் மணியாய் ஒளிந்து ஒளிரும் அருட்பெருஞ் ஜோதியைக் காண்பது தானே.
கவிஞர் இராஜ காந்தீபன் அனைவருக்கும் ஜோதி தரிசனத்தைக் காட்டுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகிறேன்.
டாக்டர் அரங்க இராமலிங்கம்
தமிழ்ப் பேராசிரியர்
சென்னைப் பல்கலைக் கழகம்.