உள்ளே....
குரு கிடைக்கின்ற பொழுது இந்த மயக்கம் தருகின்ற விஷயங்களை எல்லாம் அவர் நிவர்த்தி செய்து விடுகின்றார்.
புது கர்மாவை உண்டுப்பண்ண விடுவதில்லை உங்களிடம்.
நீங்கள் ஆசைப்படுகிற படியெல்லாம் உங்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்ற கர்மாவில் மட்டும் உங்களை கவனம் செலுத்த வைத்து இருப்பதை முடிக்க வைத்து விடுகிறார்.
இருக்கின்ற கர்மாவை முடிக்கின்ற பொழுது புது கர்மா துவக்கம் இல்லாத பொழுது மேல் நோக்கி செல்வதற்கு வேண்டிய விஷயங்களை அவர் உங்களுக்கு எடுத்துரைத்து வழி காட்டுகின்ற பொழுது பிறப்பற்ற பெரு நிலையை நீங்கள் எளிதாக அடைந்து விட முடிகின்றது.