Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
உலகம்
ஒவ்வொரு நொடியும்
ஒரு வரையாத ஓவியத்தை
காட்டிக்கொண்டு இருக்கிறது.
கண்டு பிடித்தவர்கள்
ஆயிரம் அறிவை
பெறுகிறார்கள்
அதனூடே
அமைதியும்
அடைகிறார்கள்.
நிச்சயம்
அதில் ஒரு பாடம்
இருக்க வேண்டுமே என்று
நிதானித்தேன்
உங்கள்
பார்வைக்கு நீட்டுகிறேன்
ஆதி அந்தம் நோக்கிய
ஞானப் பயணத்திற்கு
உதவட்டுமே என்று.
வாழ்வோம் வாழ்விப்போம்.